
கெடா குனோங் இனாயில் மலை அடிவாரங்களில் தொடக்கப்பட்ட டுரியான் கிங் தோட்டங்களினால்தான் பாலிங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதாகப் பல தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழத் தோட்ட குத்தகை, காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்குவதில் ஊழல் நடவடிக்கை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று கெடா ஊழல் தடுப்பு இயக்குநர் ஷாரோம் அப்துல் மனாப் தெரிவித்தார்.
அங்கு கடுமையான வெள்ளத்தில் 12 கிராமங்களில் 805 வீடுகள் சேதமடைந்த வேளையில், மூவர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
