
பணவீக்கத்தையும் விலைவாசியையும் எதிர்த்து பத்து பிகார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகாரன் நேற்று மறியல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.
கோலாலம்பூர் சோகோ பேரங்காடியின் முன் தமது ஆதரவாளர்களோடு, அரசைத் தாக்கி தட்டிகளை ஏந்திப் பேசிய அவர் பணவீக்கத்தையும் பொருள் விலையேற்றத்தையும் தடுக்க அரசு மெத்தனமாகச் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மற்றவும், அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் பிரதமர் முன்வர வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.
பிரச்சினைகளுக்கு வெளியே கூர்ந்த பார்வை செலுத்தி உணவுப் பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவினம், விலைவாசி, அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க அரசு வழி காண வேண்டுமென்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
