
உலக மக்கள் கடுமையான பொருளாதார நலிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமென அனைத்துலக நிதியம் எச்சரித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் கடந்த ஏப்ரல் மாதம் நலிவடையத் தொடங்கி அடுத்தாண்டு தேக்கநிலையை அடையும் என்றும் பொருளாதார வளர்ச்சி 3.6 விழுகாடாக அது சரியும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
எல்லா நாடுகளையும் பணவீக்கம் தாக்கும். வட்டி விகிதம் அதிகரிக்கும். சீனாவின் பொருளாதார நலிவடையும். ரஷிய-உக்ரேன் போரினால் பொருளாதாரத் தடையும் அதிகரிக்கும் என்று அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
