
அந்நிய நாடுகளில் இருந்து தொழிலாளர்களைத் தருவித்து உதவும் பெஸ்தாரி நெட் நிறுவனத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிப்பதால், வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கை சிறிது பாதிக்கும்.
இதனைத் தெரிவித்த மனிதவள அமைச்சர் எம்.சரவணன் மொத்தத்தில் அது அமைச்சின் நடவடிக்கையைப் பாதிக்காது என்றும் குறிப்பிட்டார்.
தற்போது இந்தோனேசியாவில் இருந்து வீட்டுப் பணிப் பெண்கள் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து, வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கம்போடியா, சம்பா மாநிலத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் மலேசியாவில் பணிப் பெண்களாக வேலை செய்ய விருப்பம் கொண்டிருப்பதால் அந்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
