
அரசின் நிதியுதவியோடு மேற் கல்வையை முடிக்கும் ஒப்பபந்த மருத்துவர்கள் இனிமேல் அரசின் மருத்துவமனைகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாய சேவை செய்யும் நிபந்தனை அகற்றப்படுகிறது.
அவர்கள் அரசு வேலையிலிருந்து நீங்கிக் கொள்ளலாம் அல்லது தொடர்ந்து வேலையும் செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களை குறைக்க முடியும்.
அரசின் உபகாரச் சம்பளத்தில் மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவர்கள் 10 ஆண்டு காலம் கட்டாய செவை செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.
அவர்கள் நிபந்தனையை மீறினால் 3 லட்சம் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும். அவர்கள் கல்வி பயிலும் வெளிநாட்டைப் பொறுத்து அந்த அபராதத் தொகை 1 மில்லின் ரிங்கிட் வரை அதிகரிக்கும்.
