
சிலாங்கூரில் உள்ள் புக்கிட் செராக்கா நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி எனும் தகுதியில் இருந்து நீக்கியது சட்ட விரோதம் என சமூக அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மாநில சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் அந்த பாதுகாக்கப்பட்ட நிலத்தை 2006ஆம் ஆண்டில் அந்தத் தகுதிய நீக்கியதாக சிலாங்கூர் வன இலாகா தலைவ்ர் கூறியிருக்கிறார்.
அவரின் தகவலானது மாநில சுற்றுச்சூழல் கழகத் தலைவர் ஹீ லோய் சியனின் அறிவிப்புக்கு மாறானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அங்கு குடியிருப்பு கட்டுமானத்தை மேற்கொள்ள, அந்த நிலத்தில் உள்ள காடுகள் தற்போது அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
