
போதைப்பொருள் வழக்கில் சக்கார நாற்காலிவில் வந்த குற்றவாளி ஸுல்ஹைமி தனக்கான பிரம்படியை ஏற்றுக் கொள்ள உடநிலை தகுதியாக இல்லாத காரணத்தினால் அதற்குப் பதிலாக கூடுதல் சிறைத் தண்டனையை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த வழக்கை விசாரித்த தைப்பிங் உயர்நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி, தண்டனை வழங்கப்படும் அன்று ஸுல்ஹைமியின் உடல்நிலை சரியில்லை என்று சிறை மருத்துவர் சான்றிதழ் தந்தால் மட்டுமே அவருக்குப் பிரம்படியில் இருந்து விலக்களிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
அவருக்கான 13 பிரம்பபடிக்குப் பதிலாக ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ஒரு மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.
