
பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மான் இந்தோனேசியாவுக்கான தூதராக நியமனம் பெறுவதில் இருந்து விலக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
முதலில் அவர் இந்தோனேசியாவுக்கான தூதராக நியமிக்கப்படுவார் என்ற செய்தி வந்த பின்னர், பலரும் அது பற்றிய கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர் அவரின் அடாத செய்கையினால் அம்னோ அவரை உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. அதனை அடுத்து அவர் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவது கேள்விக்குறியானது.
அதனைடடுத்து அவர் அம்னோவையும் அதன் தலைவரையும் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அடாவடித்தனமாக பல பிரச்சினைகளில் சிக்கி அவர் தமது பெயரைக் கெடுத்துக் கொண்டதை அடுத்து, இந்தோனேசிய தூதராகும் வாய்ப்பையும் இழந்தார்.
