
கல்விக் கடனுக்கான கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதை அடுத்து அதிகமான அரசு மருத்துவர்கள் பதவி விலக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அதிக சம்பளம், நல்ல வசதி வாய்ப்புகள் இருப்பதால் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்ய வெளியேறுவார்கள் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
பொதுச் சேவை துறையின் இந்த முடிவானது மக்களின் வரி பணத்தை வீணாக செலவழிக்கப் படுவதோடு மற்ற நாடுகளுக்குத் தேவைப்படும் மருத்துவர்களை நமது செலவில் உருவாக்கி அவர்களுக்கு இனாமாகத் தருவது போல இருப்பதாகவும் உள்ளது.
மனித வளத்தை உருவாக்கி நமக்குப் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்குத் தருவதை நாம் நோக்கமாகக் கொண்டிருக்க கூடாதென்றும் என்றும் அவர் சாடினார்.
