
வரும் பொதுத்தேர்தலில் பெஜுவாங் மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வந்தாலும், அது சாத்தியம் இல்லை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அக்கட்சி 120 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டாலும் லங்காவியில் மட்டுமே துன் மகாதீர் வெற்றி பெறுவார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
மலாய்க்காரர்களின் வாக்குகளை அது பிரிக்க முடிந்தாலும் அதன் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற முடியாது. அது மகத்தான வெற்றி பெறும் என்று கூறுவது மிதமிஞ்சிய ஒரு நம்பிக்கையாகும்.
இனிமேல் அது தனிப்பட்ட முறையில் அது ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. பெரிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டால்தான் அதற்கு விமோசனம் உண்டு எனக் கூறப்படுகிறது.
.
