
44 வயதுடைய நபர் ஒருவர் தமது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டதை அடுத்து, அவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அவர் தமது மனைவியால் அடித்துக் கொல்லப் பட்டிருக்கலாம் என்று ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் தெரிவித்தார்.
இந்த கொலையில் அவரது 35 வயதான மனைவி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்துள்ளது வந்துள்ளதாக ஸ்ரீ என்று மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்ட அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
அவர்களிடையே சண்டை மூளும் போது, வீட்டில் உள்ள பொருள்களை வீசி எறிந்து, உடைக்கும் பலமான சத்தம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
