
5 லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் முதல் வீட்டை வாங்குவோருக்கு அஞ்சல் வரி விலக்களிக்கப்படும்.
அதோடு 5 லட்சத்திலிருந்து 1 மில்லியன் ரிங்கிட் வரைக்குமான வீட்டுக்கு 50 விழுக்காடு அஞ்சல் வரி விலக்களிக்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த விலக்களிப்பதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டாலும் அனைவரையும் வீடு வாங்க இது ஊக்குவிப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
