
குறிப்பிட்ட்ட காலகட்டத்தில் வீட்டு நிர்மாணிப்பை பூர்த்தி செய்யாமலும் அதனைக் கைவிடும் மேம்பாட்டாளர்கள் கருப்புப் பட்டியலிடப்படுவதோடு நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்படுவர்.
வீடுகளை மூன்றாண்டுக்குள் கட்டி முடிப்பதாக உறுதி கொடுத்ததை மீறும் மேம்பாட்டாளர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என வீடமைப்பு, ஊராட்சி மன்ற துணையமைச்சர் Ismail Abdul Muthalib (இஸ்மாயில் அப்துல் முத்தாலிப்) தெரிவித்தார்.
இம்மாதிரியான செய்கை பயனீட்டாளர்களுக்கு சிரமத்தையும் நின்று போன வீடைமைப்பைக் கட்டி முடிக்க அரசு செலவு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
