
கோவிட் பெருந்தொற்று 2020இல் தொடங்கியதிலிருந்து 30,000 பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் விலகியுள்ளனர். 2020இல் 13,291 மாணவர்களும், 2021இல் 17,613 மாணவர்களும், 2022இல் 13,300 மாணவர்களும் கல்வியிலிருந்து விலகியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் Noraini Ahmad (நொராய்னி அமாட்) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிதியில்லாமை, குடும்பப் பிரச்சினை, தேர்வுகளில் தோல்வி போன்ற காரணங்களினால் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
