
கட்சி தாவிய அரசியல்வாதிகள் சுயநலத்தோடு அதனைச் செய்வதால் குற்றவியல் சட்டத்தின் வழி வழக்கு தொடர்ந்து, தண்டனை விதிக்க வேண்டுமென ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என். ராயர் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கட்சி தாவல் சட்டம் பற்றி அவையில் உரையாற்றிய அவர், கட்சி தாவிய அரசியல்வாதிகள் தொகுதி வாக்காளர்களை ஏமாற்றி சுயலாபம் சம்பாதிப்பதால் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டுமென ராயர் சாடினார். கட்சி தாவியவர்களாக Azmin Ali (அஸ்மின் அலி), சேவியர் ஜெயகுமார், எட்மண்ட் சந்தாரா, Zuraidah Kamarudin (ஸுரைடா கமாருடின்), Willi Mongkin (வில்லி மோங்கின்) ஆகியோரைக் பெயர் குறிப்பிட்டு ராயர் கூறியதால், மக்களவையில் சிறிது நேரம் வாக்குவாதமும் பதற்றமும் ஏற்பட்டது.
