
நேர்மையற்ற ஊழல்மிக்க அரசியல்வாதிகளை மலாய்க்காரர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டுமென அமானா தலைவர் Mohd Sabu (முகமட் சாபு) நாடாளுமன்றத்தில் அறைகூவல் விடுத்தார். நாட்டையும் மக்களையும் சுரண்டும் மலாய் அரசியல்வாதிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டுமெனவும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார். அம்மாதிரியான நயவஞ்சகர்களை தூக்கி எறியாவிட்டால் ஸ்ரீலங்காவைப் போலவே மலேசியாவும் தோல்வியுற்ற நாடாக ஆகும் என்று அவர் எச்சரித்தார்.
