
பக்காத்தான் ஹராப்பானுடன் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஒப்பந்தத்தை நீட்டிப்பதில்லை என்ற அரசின் முடிவானது 15ஆவது பொதுத்தேர்தல் விரைவில் நடத்துவதற்கான அறிகுறி என நுசாந்தாரா அக்காடமியின் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்தார்.
பிரதமரின் முடிவானது இஸ்மாயில் சப்ரிக்கும் அம்னோவுக்கும் பெரும் நன்மையைக் கொண்டுவரும் என்று அவர் தெரிவித்தார்.
அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் சாதகமான ஒரு நேரத்தில் நாடாளுமன்றம் கலைப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஒப்பந்தத்தை நீட்டிக்காததன் மூலம், தாம் ஒரு விசுவாசமான அம்னோகாரர் என்பதை இஸ்மாயில் சப்ரி நிரூபித்துள்ளதாக அஸ்மி ஹசான் குறிப்பிட்டார்.
