
2021லிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 31,000 இணையதள மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
போலீஸ் துறையின் புள்ளி விவரத்தின்படி, இணையத்தின் மூலம் பொருள் வாங்குதல், கடன் பெற்றுக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறுதல், ஆப்பிரிக்க ஸ்கேம் அல்லது காதலிப்பதாகக் கூறி பணம் பறித்தல், மக்காவ் ஸ்கேம், முதலீட்டுக்கென பணம் பறித்தல், மின்னஞ்சல் மூலம் பொய் வாக்குறுதி கொடுத்தல் மற்றும் குறுஞ்செய்தி மோசடிகள் போன்றவை அதில் அடங்கும்.
இந்நிலையில் இம்மாதிரியான மோசடிகளில் பாதிக்காதவாறு பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
