
இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பத் விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை அந்நாடு ஆகஸ்டு 1ஆம் தேதியிலிருந்து நீக்க அறிவித்துள்ளது.
அது தற்காலிகத் தடை என்பதால் அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜுலை 13ஆம் தேதி, அந்நாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பத் தடை விதிக்கப்படுவதாக அதன் மலேசியாவுக்கான தூதர் ஹெர்மானோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
