
சபாவை சொந்தம் கொண்டாடும் சூலு சுல்தான் வாரிசுகளுக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கை தற்போது நடந்து வருவது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அது சம்பந்தமாக லாஹாட் டத்துவில் புகார் செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவுக் குழுவில் சேருவோருக்கு அடையாளக் கார்டு, பிறப்புப் பத்திரம், சுல்தானுக்கு விசுவாசம் தெரிவிக்கும் கடிதம் போன்றவற்றின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் பரவலாக உலவி வருகிறது.
