
தமது அமைச்சரவையைக் கலந்து பேசாமல் தன்மூப்பாகப் பதவி விலகி, முஹிடின் ஆட்சியைக் கைப்பற்ற வழி வகுத்த துன் மகாதீரை கண்டிக்க முடியாத பக்காத்தான் தலைவர்கள் கோழைகள் என்று பாலிங் எம்பி அப்துல் அஸீஸ் குற்றம் சாட்டினார்.
நாட்டில் கட்சி தாவும் நடவடிக்கைக்கு மூல காரணமே மகாதீர்தான் என்றும் அவர் பல ஆண்டு காலமாக அம்னோ தலைவராக இருந்து அதிலிருந்து விலகி, பெர்சத்துவை தொடக்கி, பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டு பெஜுவாங்கை தொடங்கியுள்ளார்.
பொதுமக்களின் ஆதரவைப் பெற பக்காத்தான் தலைவர்கள் மக்களவையில் வீராவேசமாகப் பேசி மக்களுக்கு எதையுமே செய்ய முடியாது என்பதால் மக்கள் அவர்களுக்குத் தக்க பாடத்தை வரும் பொதுத்தேர்தலில் புகட்டுவார்கள் என அப்துல் அஸீஸ் குறிப்பிட்டார்.
