26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

அமைதிப் பேரணிகளை நடத்த போலீசார் உதவியாக இருக்க வேண்டும்

நாட்டில் அமைதிப் பேரணிகளை நடத்துவதற்கு போலீஸ் துறை பக்க பலமாக இருக்க வேண்டுமே ஒழிய அதற்குத் தடைக்கல்லாக இருக்கக் கூடாதென வழக்கறிஞர் Syahredzan Johan (ஷாரெட்ஸான் ஜோஹான்) வலியுறுத்தியுள்ளார்.
பேரணி நடத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியிருக்கும்போது, போலீசார் இன்னும் பழைய சித்தாந்தத்தையே பாடி வருவது ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்கள் அது சம்பந்தமாக சாதகமான தீர்ப்புகளை வழங்கி இருப்பதால், அதனைப் பின்பற்றி போலீசார் நடக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் வழக்கறிஞர் மன்றம், தூருன் மலேசியா பேரணி ஏற்பாட்டாளர்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு கொடுத்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஷாரெட்ஸான் ஜோஹான் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles