
அண்மையில் நடந்து முடிந்த மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான் அணியினர் தோல்வி அடைந்து கணேசன் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஜனநாகய ரீதியில் நடந்த தேதலில் தோல்வியடைந்த மோகன் ஷான், தமது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் ஆட்சிகுழுக் கூட்டத்தைக் கூட்டி தாமே இன்னமும் அதன் தலைவராகப் பறைசாற்றி வருகிறார்.
இதன் காரணமாக பெரும் பிரச்சினை ஏற்ட்டு நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மோகன் ஷான் கோயில் உடைப்பு, மாதமாற்றம் போன்ற பிரச்சினைகளில் தோல்வியுற்றதால் புதிய நிர்வாகக் குழுவை உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.
இந்துக்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய இந்து சங்கம் பிரச்சினையில் மூழ்கியிருப்பது சமூகத்திற்கே இழுக்கு என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி குறிப்பிட்டார்.
