
மனிதவள அமைச்சு சம்பந்தமான கேள்விகளுக்கு அதன் அமைச்சர் எம்.சரவணன் துல்லியமான விளக்கத்தை அளிக்க வேண்டுமென ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார். 2020ஆம் ஆண்டு மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் எச்ஆர்டி கார்ப்பரேஷன் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச்சென்றன் முழு விவரத்தையும் கேட்டபோது, அதிகாரிகள் எங்கே சென்றார்கள் என்று மட்டும் அமைச்சர் கூறி, அதன் செலவு எவ்வளவு என்பதைக் குறிப்பிடவில்லை என்று குலசேகரன் தெரிவித்தார். செலவுகளில் முறைகேடு எதுவும் இல்லையென்றால் உண்மையைச் சொல்வதில் என்ன பயம் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
