
பள்ளி நடவடிக்கைகள் சார்ந்த மதிப்பீட்டுச் சோதனையை ஆழமான ஆய்வுக்குப் பின்னரே அமல்படுத்தப்பட்டதாக கல்வியமைச்சர் Radzi Jidin (ராட்ஸி ஜிடின்) மக்களவையில் தெரிவித்தார். தொடக்கப்பள்ளி அடைவுநிலை தேர்வுக்குப் பதிலாக இந்தப் புதிய பிபிஎஸ் எனும் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தத் தேர்வு முறையானது சம்பந்தப்பட்ட தரப்பினர்களோடு மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வுக்குப் பின்னரே அமல்படுத்தப்பட்டதாகவும் அது மாணவர்களின் அறிவு சார்ந்த, உணர்வுமிக்க, ஆன்மிகம் அடங்கிய, உடல்நிலை சார்ந்த, புத்தாக்கத் திறனை மதிப்பீடு செய்யும் தேர்வு முறை என்றும் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
