
ஜொகூரில் உதவிநிதி பெற்று கட்டுப்படுத்தப்பட்ட 15 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அதில் சம்பந்தப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இஸ்கண்டார் புத்ரி, கூலாய், பத்து பகாட், ஜொகூர்பாரு ஆகிய இடங்களில் 17 பேர் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் போலீஸ் தலைவர் Kamarul Zaman Mamad (கமாருல் ஸமான் மாமாட்) தெரிவித்தார். அந்தச் சோதனையில் 117,600 லிட்டர் டீசல் எண்ணெய், 24 போத்தல் மது, 15 லோரிகள், ஒரு கொள்கலன் லோரி, 18 கொள்கலன்கள், ஆகிய 15 லட்சம் பெறுமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
