
பெர்மாத்தா குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு பால் பவுடர் வாங்குவதில் 86,000 ரிங்கிட், 68,000 ரிங்கிட்டை லஞ்சமாக வாங்கியதாக சிலாங்கூர் கெமாஸின் முன்னாள் இயக்குநர் Adnan Mad Daud (அட்னான் மாட் டாவுட்(59) என்பவருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறையும் 10.5 மில்லியன் அபராதத்தையும் விதித்தது. தமது இரண்டு மாடி வீட்டை வாங்குவதற்கு அவர் 159,000 ரிங்கிட்டைப் பெற்றதாக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கிய முதல் குற்றத்திற்காக அவருக்கு ஓராண்டு சிறையும் 350,000 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது குற்றத்திற்கு ஓராண்டு சிறையும் 450,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
