
குற்றங்களைத் தடுக்கும் வகையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளைப் பதிவு செய்து பொதுமக்களுக்கு ஒளிபரப்புவது குற்றமென உள்துறை அமைச்சு மக்களவையில் தெரிவித்துள்ளது. புகைப்படங்களையும் வீடியோ காட்சியையும் பதிவு செய்வது குற்றமாகாது. ஆனால், அதனைப் பதிவு செய்து, பொதுவில் ஒளிபரப்பதுவும் மற்றவர்களுக்குப் பகிர்வதும் குற்றவியல் சட்டத்திலும் தகவல், பல்லூடக சட்டத்திலும் தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,குற்றவாளிகள் குற்றங்களுக்கான ஆதாரங்களை கைப்பேசியில் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், கைப்பேசியைப் போலீசார் கைப்பற்றுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளனர்.
