
நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ செந்தோசா சட்டமன்றத் தொகுதி பத்தாயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.
உதவித் தேவைப்படும் தரப்பினருக்கு சமையல் பொருள்களை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
120 குடும்பங்களுக்கு கோதுமை, அரிசி, கிச்சாப், பிஸ்கெட், உடனடி மீ போன்ற அடிப்படை உணவுப் பொருள்கள் வழங்க இந்த நிதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
MCO ,, மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க இதுஉதவும் என நம்புகிறோம் என அவர் சொன்னார்.
