
மலேசிய மாதர்களின் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமையை மறுப்பது அபத்தமான செயலென்று முன்னாள் உள்துறை அமைச்சர் Syed Hamid Albar (சைட் ஹமிட் அல்பார்) சாடினார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அம்மாதிரியான குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிலையில், அம்மாதிரியான குழந்தைகளின் நலன் கருதி, அரசமைப்புப் சட்டத்தைத் திருத்த வேண்டுமென பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு வலியுறுத்தியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்தாலும் தேசிய பதிவக இயக்குநரும் அவரின் அதிகாரிகளும் அந்தச் சட்டத்திற்கேற்ப நடவடிக்கை எடுப்பார்களா என்பது சந்தேகமே என குறிப்பிட்டார்.
