
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தோல்விடைந்த அரசு, முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமை போன்றவற்றிற்கான எதிர்ப்பைத் தெரிவிக்க, அவரின் முதலாமாண்டு ஆட்சியைக் கொண்டாட முயற்சி எடுக்கப்படுகிறது. இதனை மேற்கொள்ள தூருன் போராட்டவாதிகள் எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தனர். பொருள்களின் விலையுயர்வு, உணவு பாதுகாப்பு, போர்க் கப்பல் ஊழலை எதிர்த்து அந்த நிகழ்ச்சி கோலாலம்பூர், சோகோ பேரங்காடியின் முன் நடத்தப்படும். இஸ்மாயிலின் ஆட்சி எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் பதவிக்கு மட்டுமே அலைவதாகவும் நாட்டை வளப்படுத்துவதில் ஆட்சி தோல்வியுற்றிருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
