
1எம்டிபிக்குச் சொந்தமான 10 மில்லியன் டாலரை ஆஸ்ட்ரோவின் முன்னாள் தலைமை செயல் முறை அதிகாரி Rohana Rozhan (ரொஹானா ரொஸான்) இன்னும் திருப்பித் தரவில்லை. ஊழல் தடுப்பு ஆணையம் அவரிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. ரொஹானா, கோல்ட்மேன் சாச் முன்னாள் வங்கி அதிகாரி Tim Leisner (டிம் லீஸ்னர்) உறவில் இருந்தபோது, அவரை அச்சுறுத்தி 10 மில்லியன் பெறுமான வீட்டை வாங்கியதாக டிம் லீஸ்னர் அமெரிக்க நீதிமன்ற விசாரணையில் தெரிவித்திருந்தார் . லண்டனில் அத்தொகைக்கு ஒரு பங்களா வீட்டை டிம் லீஸ்னர், ரொஹானாவுக்கு வாங்கித் தந்தததாக ஒப்புக் கொண்டார். அதன் பின்னர், எம்ஏசிசி ரொஹானாவிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.
