
10 தத்து மகளைக் கொடுமைப் படுத்திய மாது ஒருவர் கைது செய்யப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Riduvan (அமாட் ரிடுவான் முகமட் நோர்@ சாலே) தெரிவித்தார். 60 வயதான அந்த மாது நேற்று காலை 12.10 மணியளவில் கோலா லங்காட், தஞ்சோங் சிப்பாட்டில் கைது செய்யப்பட்டார். தத்தெடுக்கப்பட்ட மகளின் தலை முடியைப் பற்றி இழுத்துச் சென்ற காட்சி வைரலாகப் பரவிய பின்னர், அது பற்றிப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்காக அந்தச் சிறுமி பந்திங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கானது 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும்.
