
30லிருந்து 40 வயதுக்குட்பட்ட வர்களே பெரும் கடனாளிகளாக இருப்பதாகக் கடன் நிர்வாக ஆலோசனை மன்றம் (ஏகேபிகே) குறிப்பிட்டுள்ளது.
இந்த வயதுக்குட்பட்ட 387,000 பேர் கடன் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் ஏகேபிகேயின் ஆலோசனையை நாடி இருக்கின்றனர்.
பிள்ளைகளால் அதிகரித்து வரும் செலவு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த முடியாமல், வர்த்தகத் தோல்வி, வேலையிழப்பு, வீட்டின் தலைவர் மறைவு போன்ற காரணங்களினால் கடன் தொல்லை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது.



