
போதைப்பொருள் வழக்கில் அமானா தலைவர் Mohd Sabu (மாட் சாபுவின்) மகன் Ahmad Saiful Islam (அமாட் சைபுல் இஸ்லாம்) மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதி Colin Lawrance Sequirah (கோலின் லோரன்ஸ் செக்கூரா) வின் தீர்ப்பை நிலை நிறுத்தியதோடு, சைபுலின் சிறுநீர் மாதிரியை போலீஸ் பரிசோதனைக்கும் தடயவியல் பரிசோதனைக்கும் பயன்படுத்தியது விதிமுறைக்கு மாறான செயல் என்பதை ஒப்புக் கொண்டது.
இதற்கு முன்னர் 2020 ஜூன் 24ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சைபுல்லுக்கு 8 மாத சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.



