
15-வது பொதுத் தேர்தலில் மஇகா கோலாலம்பூரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளது. அந்த விருப்பத்தை, கூட்டரசு பிரதேச மஇகா பிரிவு, கட்சியின் தலைவர் Tan Sri S.A விக்னேஸ்வரனிடம் தெரிவித்திருப்பதாக, அப்பிரிவின் தலைவர் எஸ். ராஜா தெரிவித்தார். மஇகா இதுவரையில், கூட்டரசு பிரதேசத்தில் எந்தவொரு நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டதில்லை. இதனிடையே, அப்பகுதியில் மஇகா போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ள ஒரு பகுதியாக, Batu நாடாளுமன்ற தொகுதி இருப்பதாக அவர் கூறியிருப்பதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.



