
நாட்டில் நோய்த்தொற்று அதிகரிப்பால் மூன்றாவது முறையாக பொது முடக்கம் அமுலுக்கு வருவதால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஜொகூர் கூலாய் இளைஞர் மன்ற தலைவர் சுந்தரம் பலராமன் தெரிவித்தார்.
இவர்களுக்கு உதவ அரசாங்கம் பல உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
வீடுகள் மற்றும் கடைகளுக்கான வாடகை பணத்தை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்.
முழு ஊரடங்கு கட்டுபட்டால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பி 40 மற்றும் எம் 40 குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்கள் மீதான சுமையை குறைக்க அரசாங்கம் முன் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
