
கோவிட் 19 நோய்தொற்று நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் நேற்று மற்றும் ஒரேநாளில் 98 பேர் மரணம் அடைந்த சம்பவம் மலேசியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாண்டு ஐந்து மாதங்களில் 477 பேர் நோய் தொற்றால் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 98 பேர் மரணம் அடைந்த சம்பவம் ஒரு கறுப்பு அத்தியாயம் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா வேதனையுடன் தெரிவித்தார்.
