
முன்னாள் பிரதமர் துன் அமாட் படாவி டிமென்ஷியா எனும் கடுமையான ஞாபக மறதியால் அவதிப் படுவதாக அவரின் மருமகன் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் துன்பத்தை வெளிப்படுத்த, படாவியின் நிலை பற்றி மக்களுக்குத் தெரிவிக்க அவரது உறவினர்கள் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமது மாமனாருக்கு அவரின் பெயர் கூட ஞாபகத்தில் இல்லை. அவரின் மகளுமான் தம்முடைய மனைவியின் பெயர் கூட அவருக்கு ஞாபகத்தில் இல்லை.
அவரால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவதில்லை. அவரின் உடல் இருக்கிறது ஆனால், அவரின் மனம் அவரிடம் இல்லை. அவர் இயல்பாகச் செயல்பட முடியவில்லை. அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் கைரி தெரிவித்தார்.
