
ஜனநாயகத்தின் முதுகெலும்பாகத் திகழும் நீதித்துறைக்கு மரியாதையை மக்கள் தர வேண்டுமென சிலாங்கூர் சுல்தான், சுல்தான் Sharafudin idris Shah (ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா) வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரமாகவும் எவ்விதத் தலையீடும் இன்றி இயங்கும் நீதித் துறையைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாக இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நஜிப் ரசாக்கின் தண்டனையை உறுதிப்படுத்திய கூட்டரசு நீதிமன்றத்தைக் குறை கூறுவதற்கு முன்னர், தீர்ப்பினை முழுமையாகப் புரிந்து கொண்டு, அது சார்ந்த சட்டங்களையும் படித்துத் தெளிந்த பின்னர், அதனை விமர்சிக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
