
- மஹி ராமகிருஷ்ணன் சாடல்
எனது கொள்கைக்கு ஏற்ற வகையில் இருக்கும் கட்சிக்குத் தாம் மாறுவதாகவும் ஆனால் அது பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் இல்லையென்று தெரிவித்தார்.
தாம் பதவிக்காக ஒவ்வொரு கட்டியாக மாறி வரவில்லை என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸாய்ட் இப்ராஹிம் விளக்கமளித்தார்.
அம்னோவில் இருந்து ஸாய்ட் விலக்கப்பட்ட பின்னர், முதலில் பிகே ஆரில் சேர்ந்தார். அதன் பின்னர், கீத்தா கட்சியைத் தோற்றுவித்து பின்னர் அதனைக் கலைத்து விட்டு, ஜசெகவில் இணைந்தார். பின்னர் அதிலிருந்து விலகி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அம்னோவில் இணைய மனு செய்துள்ளார்.
தமக்கு எந்தக் கட்சியிலும் முக்கிய பதவி கிடைக்கவில்லை என்றும் எல்லாக் கட்சியிலும் பலமும் பலவீனமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாம் அம்னோவில் இணைய விரும்புவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இல்லை என்றும், கட்சியில் உருமாற்றத்தைக் கொண்டு வருவதே நோக்கமென்றும் அவர் தெரிவித்தார்.
