
சித்தியாவனில் ஒரு வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தச் சம்பவம் பிற்பகல் 1.07 மணிக்கு நடந்ததாகவும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவன் வீட்டை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட பின்னர், மீண்டும் ஒரு முறை சுட முயன்றபோது, துப்பாக்கி செயல்படவில்லை.
ஆயினும் அவர்களிருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக பேராக் போலீஸ் தலைவர் Yusri Hassan Basri (யுஸ்ரி ஹசான் பஸ்ரி) தெரிவித்தார்.
வீட்டின் உரிமையாளரின் கார் கண்ணாடி உடைந்திருந்ததாகவும், காலி துப்பாக்கிக் குண்டு காரின் கீழ் கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
