
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் ஹோட்டல் அறையில் மலேசிய பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் செந்தூலில் கைது செய்யப்பட்டார்.
அந்த மலேசியப் பெண் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததாகவும், அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கிய வடு காணப்பட்டதாகவும் டாங் வாங்கி போலீஸ் தலைவர் Noor Delihan Yahaya (நூர் டெலிஹான் யஹாயா)
தெரிவித்தார்.
அதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 27 வயது வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டு, ஒரு வார காலம் தடுத்து வைக்கப்படுவதாக நூர் டெலிஹான் தெரிவித்தார்.
