
நாட்டிற்குள் கருப்பு பட்டியலிடப்பட்ட கள்ளக் குடியேறிகளை கடத்தி வந்த கும்பல் தொடர்பான விசாரணைக்காக, இரு குடிநுழைவு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஜோகூர், Sultan Abu Bakar குடிநுழைவு சோதனை மையத்தில் வேலை செய்து வந்த 20, 27 வயதுடைய இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, அத்துறையின் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud உறுதிப்படுத்தினார். முன்னதாக, Larkin Sentral பகுதியில், குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 25 கள்ளக் குடியேறிகளை கைது செய்ததன் வாயிலாக, Ah chong எனப்படும் கும்பலின் நடவடிக்கையை முறியடித்ததாக , அவர் கூறினார்
