
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்படும் என பிகேஆரின் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி) தெரிவித்தார்.
தாமும் கட்சியின் உதவித் தலைவர்களும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வர் என்றும் தாம் தொடங்கிய வேட்பாளர் சுய விண்ணப்ப நடவடிக்கையில் 1,673 பேர் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித் திருப்பதாகவும் ரபிஸி தெரிவித்தார்.
வேட்பாளர்களின் அனுபவம், தேர்தல் இயந்திரத்தில் அவர்களின் பலம், கல்வித் தகுதி, சமூகத்திற்கான பங்களிப்பு, ஊடக பலம் போன்ற அம்சங்களின் வழி தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
