
தமது நற்தோற்றத்தைக் கெடுப்பதற்காக, மஇகா பொதுப் பேரவையில் தாம் பேசியதை எதிர்கட்சியினர் திரித்து கூறியிருப்பதாக, தேசிய முன்னணி கூட்டணியின் தலைவர் Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 15-வது பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால், அரசியல் நோக்கம் கொண்டு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள், தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் தலைவர்கள் மீது சுமத்தப்படக் கூடும். இதுவே எதிர்கட்சியுடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். இதனால் தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிலர், கட்சித் தாவியிருப்பதாகவே , தாம் கூறியிருந்ததாக சாஹிட் கூறினார்.
