
பத்து தொகுதியில் பல வாக்காளர்களின் அனுமதியின்றி முகவரியை மாற்றியிருக்கும் புகாரை ஆய்வு செய்யப் சென்ற அதன் துணைத் தலைவர் Rozan Azen Mat Rasip (ரோஸான் அஸென் மாட் ராசிப்) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டு ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
பொதுமக்களின் நலனைக் கருதி விசாரணை செய்யச் சென்ற அவரை கைது செய்தது நியாயமில்லை என்று அவரின் வழக்கறிஞர் Gurmukh Singh (குர்முக் சிங்) தெரிவித்தார்.
அவர் மீதான குற்றத்திற்கு கூடியபட்சம் 400 ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்க சட்டம் வகை செய்வதாக அவர் தெரிவித்தார்
