
பொதுத்தேர்தலில் பெர்சத்து, பக்காத்தான் ஹராப்பானோடு ஒத்துழைக்கும் எனும் செய்தியில் உண்மையில்லை என்று அதன் தலைவர் முஹிடின் யாசின் தெரிவித்தார்.
பக்காத்தானோடு ஒத்துழைக்க தமது கூட்டணி எவ்வித உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்பதால், அக்கூட்டணியோடு ஒத்துழைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதனை விடுத்து, உறுப்புக் கட்சிகளோடு நல்லிணக்கத்தை அதிகரிப்பதோடு தமது கூட்டணி நாட்டு நலனை முன்னிட்டு லஞ்ச ஊழலை ஒழிக்க முனைப்பு காட்டும் கட்சிகளோடு கூட்டு வைக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
