24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தொழிலாளர்கள் வாக்களிக்க விடுப்பு தரப்பட வேண்டும்

பொதுத்தேர்தல் வேலை நாளில் நடைபெற்றால், தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு விடுமுறையோ அல்லது வாக்களிக்கும் நேரத்திற்கு விடுப்போ வழங்க முதலாளிமார் முனைய வேண்டுமென மனிதவள அமைச்சர் சரவணன் கேட்டுக் கொண்டார்.
18 வயதுக்கு மேல் உள்ளோருக்கும் வாக்களிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் விதிமுறையை ஒவ்வொரு முதலாளியும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு பண்டிகைக்கான விடுமுறை அல்லது வாக்களிக்கும் நேரத்திற்கான விடுப்பு தர முதலாளிகள் முடிவெடுக்க வேண்டுமென சரவணன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles