
இந்தியர்களைப் பாதிக்கும் விவகாரங்களில், முக்கியமாக கல்வி, பொருளாதாரம் போன்ற அம்சங்களில் அரசு சிறப்பு கவனத்தைச் செலுத்துவதாகப் பராமரிப்பு பிரதமர் Ismail Sabri Yacob (இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்தியர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களூக்காக மித்ராவின் வழி 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதோடு, இந்திய தொழில்முனைவோரை உருவாக்க 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளி மேம்பாட்டிற்கு கல்வி துறைக்கான ஒதுக்கீட்டில் கணிசமான தொகை அளிக்கப்படுவதாகவும் மஇகாவின் கீழ் இயங்கும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக மேம்பாட்டிற்கு 5லிருந்து 20 மில்லியன் ரிங்கிட் வரை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார்.
